போலந்தில் கொவிட்-19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது

sssssssssss 1

போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போலந்தில் வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 10பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 44ஆவது நாடாக விளங்கும் போலந்தில், இதுவரை 64ஆயிரத்து 689பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் 887பேர் பாதிக்கப்பட்டதோடு, 16பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை 18ஆயிரத்து 582பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 82பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், இதுவரை 44ஆயிரத்து 97பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.