வசந்த் & கோ நிறுவனர் கொரோனாவால் மரணம்!

625.0.560.350.160.300.053.800.1200.160.90
625.0.560.350.160.300.053.800.1200.160.90

வசந்த் & கோ நிறுவனரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில் காலமாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த இவருக்கு கடந்த 10ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவரது உயிரிழப்புக்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.