என்னை கொலை செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்-நிக்கோலஸ் மதுரோ

31jan19 v13
31jan19 v13

என்னை கொலை செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். நான் மிகவும் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்கு பலியாகினேன். அமெரிக்க அரசு என் தலைக்கு 15 மில்லியன் டொலர்கள் நிர்ணயித்துள்ளது என வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார்.

வெனிசுவேலா ஜனாதிபதி, அமெரிக்கா தன்னை கொல்வதற்கு முயற்சி செய்ததாக கூறுவது முதல்முறையல்ல என்பதும் அவரைப் பொறுத்தவரை, கொலம்பியாவில் வொஷிங்டனின் ஒப்புதலுடன் ஏற்பாடு செய்யப்பட்ட பல முயற்சிகள் 2019ஆம் ஆண்டு தடுக்கப்பட்டன.

தனது நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காவே முழு காரணம் என்றும், வெனிசுவேலாவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாகவும் நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.