தாய்லாந்தில் கடந்த மூன்று மாத காலமாக 600 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் உள் நாட்டவர்கள் எவருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தாய்லாந்து சுகாதாரத் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.