உலகளாவிய பொருளாதார மீட்சிக்கு ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்று உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் கார்மென் ரெய்ன்ஹார்ட் தெரிவித்துள்ளார்.
“அடைப்புகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் நீக்கப்பட்டதால், விரைவான மீளுருவாக்கம் இருக்கும், ஆனால் ஒரு முழுமையான மீட்புக்கு ஐந்து ஆண்டுகள் வரை ஆகும்” என மாட்ரிட்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டின் போது ரெய்ன்ஹார்ட் எச்சரித்துள்ளார்..
மந்தநிலை ஒரு சில நாடுகளில் நீடிக்கும் என்றும் இதனால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் என்றும் ரெய்ன்ஹார்ட் கூறியுள்ளார்.
பணக்கார நாடுகளின் நெருக்கடியால் ஏழ்மையானவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், பணக்கார நாடுகளை விட ஏழ்மையான நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பது இவருடைய கூற்றின் ஆழமான கருத்து.
நெருக்கடியைத் தொடர்ந்து இருபது ஆண்டுகளில் முதல் முறையாக, உலக வறுமை விகிதங்கள் உயரும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.