உகண்டாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையில் இருந்து 200 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கைதிகள் 15 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு தொகை வெடிபொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.