விவசாயம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்த விவாதம் இன்று!

unnamed 3 2
unnamed 3 2

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) விவசாயம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இதுபற்றி மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என சிவ சேனா வலியுறுத்தியுள்ளது.

இதேபோல் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் இருப்பது தொடர்பாக விவாதிக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இதேவேளை குழந்தைகள் காணாமல் போன விவகாரம் குறித்து விவாதிக்குமாறும் பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது. இந்த பிரச்சினைகள் குறித்த விவாதம் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.