மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் இன்று அதிகாலை மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ள அதே நேரம் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த பலர் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 25 இற்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதுடன் குறித்த கட்டடத் தொகுதி 1984 ஆம் ஆண்டு கட்டப்படுள்ளதாகவும் இதில் 21 குடியிருப்புகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.