இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,130 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொவிட்-19 காரணமாக ஆயிரத்து 130 பேர் உயிரிழந்தனர்.

இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் கொவிட்-19 தொற்று 86 ஆயிரத்து 961 பேருக்கு உறுதியாகியுள்ளது.

இதன்படி, இந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54 இலட்சத்து 87 ஆயிரத்து 580 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.