பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி இன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம், வயதான பெற்றோரை பார்க்கவேண்டும் என்ற காரணங்களைக்காட்டி 90 நாட்கள் பரோல் கோரிய தாயார் அற்புதம்மாள் வழக்கை தொடர்ந்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பரோல் மனுவை நிராகரித்துவிட்டதாக தமிழக அரசும், சிறைத்துறையும் தெரிவித்தன.
இந்நிலையில் இன்று வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர்,
“பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். உத்தரவு கிடைத்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, 30 நாட்கள் விடுப்பு அளிக்கவேண்டும்” எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
அவர் விடுப்பில் இருக்கும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்காக சிறைத்துறை விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.