காலமான இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் பூதவுடலை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் அவர் காலமானார்.
எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.