தென்கொரியாவிடம் மன்னிப்பு கோரினார் வட கொரிய ஜனாதிபதி!

images 7
images 7

தென்கொரிய அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதற்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்உன் தனது தனிப்பட்ட மன்னிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தனிப்பட்ட முறையில் அவர் மன்னிப்பு கோருவது மிகவும் அபூர்வமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு கோரிய அறிக்கை தென் கொரிய தலைவர் மூன் ஜே இன் இற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வட கொரிய தலைவரின் செயலகமான ‘புளு ஹவுஸ்’ தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் தென் கொரிய தலைவர் மற்றும் மக்களிடம், வடகொரிய தலைவர் மன்னிப்பு கோருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.