மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டம் விவசாயிகளுக்கு மரண தண்டனை போன்றது – ராகுல் காந்தி

விவசாய சட்டம் விவசாயிகளுக்கு மரண தண்டனை போன்றது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் விவசாயிகள் உள்ளிட்ட பலர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, விவசாய சட்டங்கள், நமது விவசாயிகளுக்கு மரண தண்டனை போன்றது. விவசாயிகளின் குரல் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நசுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.