மனைவியையும், 3 வயது பிள்ளையையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை!

லண்டனின் Brentford என்ற பிரதேசத்தில் ஒருவர் தனது மனைவியையும், பிள்ளையையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

பூர்ணா காமேஸ்வரி சிவராஜா என்ற 36 வயது பெண்ணும், கைலாஸ் குகராஜ் என்ற 3 வயது பிள்ளையுமே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்கள்.

இவர்களை கொலைசெய்தவர் என்று நம்பப்படும் குகராஜ் சிதம்பரநாதன் என்ற 42 வயது நபர் தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன அழுத்தம் காரணமாக நிறையப் படுகொலைகள் குடும்ப உறுப்பினர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பிரித்தானியாவில் குடும்பங்கள் இடையிலான சுமார் 100 இற்கும் அதிகமான சம்பவங்கள் இந்த வருடத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளார்கள்.