அமெரிக்க ஜனாதிபதி இந்த வார இறுதியில் மீண்டும் மக்களை சந்திக்க முடியும்!

கொரோனா தொற்றுறுதியான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிகிச்சை நடவடிக்கைகளை நிறைவு செய்து இந்தவார இறுதியில் மீண்டும் மக்கள் சந்திப்பில் ஈடுபட முடியுமென அவரது வைத்தியர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி சிகிச்சை நடவடிக்கைகளுக்கு சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவரது உடல்நிலை சீராக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இன்றைய தினம் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.