காவி உடையில் திருவள்ளுவர்

valluvar
valluvar

காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றது. இதற்கு பலரும் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தப் படத்தில், வள்ளுவரின் உடை காவி வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவரின் கை மற்றும் நெற்றியில் திருநீறு பட்டை இருப்பதைப் போலவும் வரையப்பட்டுள்ளது.

இந்த பதிவு தமிழக பாஜகவின் சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றப்பட்டிருந்தது.

தமிழக பாரதிய ஜனதா கட்சி திருவள்ளுவரை அவமதித்து விட்டதாகக் கூறி #bjpinsultsthiruvalluvar என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இடப்படும் பதிவுகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

டுவிட்டர் பயனர்கள் பலர் இந்த ஹேஷ்டேக்கை இட்டு பாஜக-வை சாடி வருகின்றனர்.