கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பெரும்பான்மையான மக்கள் பாதிப்புக்குள்ளாவதை அனுமதிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதற்கு எதிராக சமூகத்திற்குள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது அவசியமெனவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று ஜெனீவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.