இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட்ஷைரில் அமைந்துள்ள A40 வீதியில் லொறியொன்றும் காரொன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளானர்.
ஒக்ஸ்போர்ட்ஷைர் மற்றும் கெசிங்டன் இடையே அமைந்துள்ள ரயில் பாலத்திற்கு அருகிலேயே இந்த விபத்தானது இடம்பெற்றுள்ளது.
29 வயதான தாயாரும் அவரது நான்கு மற்றும் எட்டு வயதுடைய இரு மகள்களும், ஆறு வயதுடைய மகனுமே இந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
56 வயதுடைய லொறியின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.