இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றின் மதில் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு மாத குழந்தை உட்பட 9 பேர் பலியாகினர்.
அந்தப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழை காரணமாக, குறித்த மதில் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில், கடந்த 48 மணிநேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.