கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தால் உலகமே அச்சமடைந்து கொண்டிருக்கும் நிலையில் பிரித்தானியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளான 17234 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து அந்நாட்டு உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் 6 இலட்சத்து 34 ஆயிரத்து 920 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 43 ஆயிரத்து 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அந்நாட்டு மக்களை சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.