யேமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், யேமனில் மோஷா நகரில் உள்ள அரசு படைகளுக்கு சொந்தமான இராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.