பாகிஸ்தானில் காவல்துறையினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல்!

பாகிஸ்தானில் இராணுவத்திற்கும், காவல்துறையினருக்கும் ஏற்பட்டுள்ள மோதலால், அந் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மருமகன் சப்தார் அவானை கைது செய்வது தொடர்பான விவகாரத்தில், சிந்து மாகாண காவல்துறை தலைவரை பாகிஸ்தான் இராணுவம் கடத்தி விட்டதாக தகவல் பரவியுள்ளது.

இத் தகவலால் பாகிஸ்தானில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கராச்சியில் இராணுவத்திற்கும் காவல்துறையினருக்குமிடையே மூண்ட மோதலில் இதுவரை 10 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இச் சம்பவங்கள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கராச்சி இராணுவ தலைமை அதிகாரியை பாகிஸ்தான் இராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா உத்தரவிட்டுள்ளார்.