கர்நாடகாவில் மின்னல் தாக்கியதில் 9 பேர் பலி

download 15 1
download 15 1

கர்நாடகாவில் இடி, மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (21) பெல்லாரியில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தின் காரணமாக மிளகாய் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் பெலகாவி அருகேயுள்ள சவுந்தத்தி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 2 பெண்கள், கதக் ஹாவேரி ஹூப்ளி ஆகிய மாவட்டங்களிலும் 5 பேர் என மொத்தமாக 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.