கொரோனா தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பு விரைவில் – அமெரிக்க ஜனாதிபதி

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை இன்னும் சில வாரங்களுக்குள் அமெரிக்கா வெளியிடுமென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

நாஷ்வில்லேயில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுடன் நேரடி விவாதத்தில் ஈடுபட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது தனக்கு அந்த மருந்து அளிக்கப்பட்டதாகவும், அதன்பிறகு தாம் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்னும் சில வாரங்களுக்குள் மருந்து குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், அமெரிக்காவில் இராணுவம் மூலம் மருந்து விநியோகம் செய்யப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.