கனடாவில் வீடொன்றிலிருந்து 9 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த குடியிருப்பு தொகுதி சுற்றி வளைக்கப்பட்டு இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் உயிரிழந்த விதம் குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ள பொலிஸார் வீட்டுக்குள் நடந்த மர்மம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.