ரஷ்யாவில் விஷம் கலந்த ஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த தம்பதிகள்!

34763876 8873473 image a 3 1603478214195
34763876 8873473 image a 3 1603478214195

ரஷ்யாவில் விஷம் கலந்த ஊறுகாய் சாப்பிட்டு இறந்த பெற்றோரின் உயிரற்ற உடல்களுடன் இரண்டு சிறு குழந்தைகள் மூன்று நாட்கள் உயிருடன் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் லெனின்கிராட் ஒப்லாஸ்டில் உள்ள தொடர் மாடி வீட்டில், குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அலெக்சாண்டர் வயது 30, மற்றும் திருமதி விக்டோரியா யாகுனின் வயது 26,ஆகியோர் குறித்த தொடர் மாடி வீட்டில், தமது ஐந்து வயது பெண் குழந்தை, மற்றும் ஒரு வயது ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

குறித்த தம்பதியினர் உட்கொண்ட ஊறுகாய் விஷமானதையடுத்து அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருவதாவது,

எரிவாயு ஆலைத் தொழிலாளி ஒருவர் யாகுனினுக்கு இறப்பதற்கு முதல் நாள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊருகாய் போத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.

குறித்த ஊருகாய் போத்தல் சமையலறையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஊருகாய் உட்கொண்டதையடுத்து ஊறுகாயிலிருந்து வரும் போட்லினம் நஞ்சுதான் மரணத்திற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

போட்லினம் நச்சு மூலம் முடக்கம் மற்றும் சுவாசக் கோளாறு மூலம் மரணம் கூட ஏற்படலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த தம்பதியினர் உயிரிழப்பிற்கும் இது காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இவர்கள் இடையே வேறு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பெற்றோரை இழந்து சோகத்தில் வாடும் குழந்தைகளை யாகுனின் தந்தை பராமரித்து வருகிறார்.