தமிழகத்தில் அரசு அலுவலகங்களை அடுத்த ஆண்டு திறக்க அனுமதி!

tamil nadu 720x430 1
tamil nadu 720x430 1

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால், ஜனவரி முதலாம் திகதி முதல், அரசு அலுவலகங்கள் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள வர்த்தமானியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் சனிக்கிழமை உட்பட 6 நாட்கள் இயங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இனி, 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து அரசு அலுவலகங் களும் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.