தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றிணைவோம் – எடப்பாடி பழனிச்சாமி

தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சிறப்பாக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில், தமிழகம் 2ஆவது இடம் பிடித்துள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ருவிட்டர் பதிவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அயராத முயற்சி, வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் விளைவால் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம்” என பதிவேற்றியுள்ளார்.