கொரோனாவின் எதிரொலி :ஈரானில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

download 8
download 8

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சியாக ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

தேசிய கொரோனா வைரஸ் பணிக்குழுவின் தொலைக்காட்சி கூட்டத்தின்போது இந்தப் புதிய கட்டுப்பாடுகள் நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த கட்டுப்பாடுகளால், ஈரானின் 31 மாகாணங்களில் 25இல் வைரஸ் தீவிர நிலையிலுள்ள 46 மாவட்டங்களின் இயல்புநிலை பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் புதன்கிழமை முதல், அந்த மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், களியாட்ட விடுதிகள், ஜிம்கள் மற்றும் முக்கிய தளங்கள் 10 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஈரானில், இதுவரை ஆறு இலட்சத்து 12 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மாதங்களுக்குள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது