குருத்வாரா பாதை திறப்பு – ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்பு

Guterres
Guterres

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வருவது கடமையாக உள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 கி.மீ தொலைவில் இந்த குருத்வாரா உள்ளது.

இதற்காக சீக்கிய பக்தர்கள், சென்று வருவதற்கு வசதியாக இரு நாடுகளுக்குமிடையே, 3 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, இரு நாடுகளும் செயல்படுத்தி உள்ளன.

இந்த சாலையை யாத்திரிகர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில், சீக்கியர்கள் புனித யாத்திரை செல்ல அமைக்கப்பட்ட பாதை முறைப்படி திறக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்:

கர்தார்பூர் வழித்தடம் எனும் பெயரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே புதிய எல்லை வழி திறக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். குருநானக்கின் 550வது பிறந்த தினத்தின் போது எல்லை தாண்டி கர்தார்பூர் செல்லும் யாத்திரிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.