மியன்மார் பொதுத் தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைய, மியன்மாரில் பொது மக்கள் பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் பதுகாப்பு கையுறைகளை அணிந்து வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், முதியவர்கள் முன்னதாகவே வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
50 வருட இராணுவ ஆட்சி முறைமையின் கீழ் இருந்து விடுவிக்கப்பட்ட மியன்மாரின் இரண்டாவது ஜனநாயகத் தேர்தலாக இந்தத் தேர்தல் கருதப்படுகிறது.
இதற்கமைய, இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 37 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறையலாம் எனவும் சர்தேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.