பேரறிவாளன் மீண்டும் சிறைசெல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் – அற்புதம்மாள்

download 1 9
download 1 9

நன்னம்பிக்கை உறுதிமொழியின் கீழ் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளன் மீண்டும் சிறை செல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுக்கொண்டுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தற்போது சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அற்புதம்மாள் மகனின் விடுதலைக்காக கடந்த பல வருடங்களாக போராட்டம் நடத்தியபோது ஏற்பட்ட மன உளைச்சலை விட தற்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இறுதிகாலத்தை மகனுடனேயே செலவிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மகன் பேரறிவாளன் மீண்டும் சிறைசெல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என தமிழக முதலமைச்சருக்கு அவர் வேண்கோளை விடுத்துள்ளார்.

எழு பேர் விடுதலைக்கும் பன்முக ஒழுங்கு கண்காணிப்பு முகாமை அறிக்கைக்கும் இடையில் எந்த தொடர்புமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மகனின் விடுதலைக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.