சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த பகுதியில் உள்ள முஸ்லிம் அல்லாத கல்லறையில் ஐரோப்பிய இராஜதந்திரிகள் கலந்து கொண்ட முதலாம் உலகப் போரின் முடிவை நினைவுகூரும் 102 ஆண்டு விழாவிலேயே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இக் குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுதகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இது குறித்து தகவல் வெளியிட்டள்ள பிரான்ஸ் தூதரகம் “இந்த கோழைத்தனமான, நியாயப்படுத்த முடியாத தாக்குதலை பிரான்ஸ் கடுமையாக கண்டிக்கிறது.” என தெரிவித்துள்ளது.