டிரம்பிடம் இருந்து பிரிந்த மனைவி: திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி

4 3
4 3

அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற முன்னாள் போர்வீரர்களின் தினத்தன்று மலர்வளையம் வைக்கும் நிகழ்விலின் போது டொனால்ட் டிரம்பிடமிருந்துஅவருடைய மனைவி மெலேனியா விலகிகாணப்பட்டதை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே மெலேனியா டிரம்பிடமிருந்து விலகி தனியாக காணப்பட்டுள்ளார்.தேர்தலில் தோற்ற பின்னர் டிரம்ப் கலந்துகொண்ட முதலாவது பொது நிகழ்வில் மெலேனியாவை இராணுவவீரர் ஒருவர் அழைத்து வந்துள்ளார்.டிரம்பும் மெலேனியாவும் முகக்கவசங்களை அணியாமல் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியதும் இருவரினதும் திருமணவாழ்க்கை முடிவிற்கு வரலாம் என முன்னாள் உதவியாளர் ஒருவர் ஊகங்களை வெளியிட்டுள்ள தருணத்தில் பொதுநிகழ்வில் இருவரும் விலகி காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை குடியரசுக்கட்சியின் மாநாட்டில் கடந்தமாதம் டிரம்ப் உரையாற்றிவிட்டு வெளியேறும் போது மெலேனியாவின் கரங்களை பற்றிக்கொள்ள முயன்றதாகவும் எனினும் அவர் அதனை தவிர்த்துக்கொண்டார் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.