பாகிஸ்தானில் பழமையான விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு!

7 2
7 2

வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் மாவட்டத்தில், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்துக் கோயிலை பாகிஸ்தான் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொல்லியத்துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பரிகோட் குண்டாய் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின்போது இப் புராதன கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கோயிலுக்கு அருகே படைநிலைகளும், நேரத்தைக் காட்டும் கோபுரங்கள், நீர்த்தொட்டி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த ஸ்வாத் மாவட்டம் இருந்தாலும், இந்து சாஹி காலத்தில் கட்டப்பட்ட பல கட்டட அமைப்புகள் முதல்முறையாக தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.