இங்கிலாந்தில் பர்ன்லி நகரத்தில் கத்திகுத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.குறித்த தாக்குதல் இன்று காலை வேளை மார்க்ஸ் & ஸ்பென்சர் என்ற கடையொன்றில் இடம்பெற்றுள்ளது.
இருவர் படுகாயம் அடைந்துள்ள போதிலும் ஆனால் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதலைத் தொடர்ந்து கடைக்கு வெளியே இருந்த சிசிரிவி காணொளியின் உதவியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபரென சந்தேகிக்கப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், வேறு யாரும் சம்பந்தப்படவில்லை என்று நம்பப்படுகிறது.