ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு!

large borewell 34751 1200x630 1
large borewell 34751 1200x630 1

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

உத்தரபிரதேச மாநிலம் மெஹ்போபா மாவட்டத்தில் உள்ள புதோதரா கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் அங்குள்ள வயல்வெளியில் நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.

30 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவனை மீட்க 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அருகில் பள்ளம் தோண்டப்பட்டது. மேலும் சிறுவன் சுவாசிப்பதற்காக ஒக்சிசன் செலுத்தப்பட்டது. ஆனால் எதுவும் பயன் அளிக்கவில்லை.

இதற்கிடையே மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். 20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நேற்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

உடனே அவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்துள்ளது. இதனால் மீட்பு படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.