இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமவுலியின் வெற்றிக்கு உண்மையான சொந்தக்காரர் என்றால் அவரது அப்பா விஜயேந்திர பிரசாத் என்பவர் தான். அவரது கதைகளையே ராஜமௌலி படமாக்கி வருகிறார்.
அப்பேர்ப்பட்ட விஜயேந்திர பிரசாத் பத்து வருடங்களுக்கு முன்பு இயக்கிய தெலுங்குப் படம் ஒன்று தமிழில் டப்பாக உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2011 ஆம் ஆண்டு ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ராஜசிங்கம். பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் சினேகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் அப்போதைய பாகுபலி என கொண்டாடப்பட்டது.
சரித்திர பட வரிசையில் வெளியாகி வெற்றியை பெற்ற பாகுபலி, சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களை போலவே பெரிய வெற்றியைப் பெற்ற படம் தான் ராஜசிங்கம். இந்த படத்தை தற்போது தமிழில் டப் செய்து தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.