பிக்பொஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அர்ச்சனா என்ன செய்தார் தெரியுமா?

archana 3
archana 3

பிக்பொஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் அர்ச்சனா என்பது அனைவரும் அறிந்ததே. அர்ச்சனா தான் வெளியேறுவார் என்பதை அந்த வீட்டிலுள்ளவர்கள் யாருமே நம்பவில்லை.

திடீரென அவர் வெளியேறியதும் அனைவருக்கும் குறிப்பாக ரியோ, சோம் மற்றும் கேபி ஆகிய மூவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

இந் நிலையில் பிக்பொஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நேரத்தில் கூட ஒரு சொட்டு கண்ணீர் வடிக்காமல் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் விடைபெற்றுக் கொண்டு சென்றவர் அர்ச்சனா.

இந் நிலையில் தற்போது அர்ச்சனா தனது வீட்டில் நுழையும் காட்சி குறித்த நிகழ்ச்சியான காணொளி வைரலாகி வருகிறது.

வீட்டில் நுழைந்தவுடன் அவருக்கு ஆரத்தி எடுப்பதும், அவருடைய அன்பு மகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதும், அம்மாவை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொள்வதும், கேக் வெட்டும் காட்சிகள் உட்பட பல காட்சிகள் அந்த காணொளியில் உள்ளன.

அந்த காணொளியின் இறுதியில் ’பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற பாரதியின் வாசகத்துடன் காணொளி முடிவடைகிறது.

பிக்பொஸ் வீட்டில் அர்ச்சனா விளையாடிய விதம் குறித்து சர்ச்சைக்குரிய பல கருத்துகள் இருந்தாலும் அவர் ஒரு தைரியமான பெண் என்பதும், எதையும் சமாளிக்கும் திறன் உள்ளவர் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.