சுப்பர் ஸ்ரார் நடிகர் ரஜினிகாந்த் திடீரென ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரத்த அழுத்தம் காரணமாக தீவிர கண்காணிப்புப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மீண்டும் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அங்கு 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து படப்பிடிப்புக்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இதனையடுத்து ரஜினிக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும், நடிகர் ரஜனிகாந் ஐதராபாத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
இந்நிலையிலேயே நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் என அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை எனவும், இரத்த அழுத்தம் காணப்படுவதால் தற்போது அவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.