மலையாள பாடலாசிரியர் அனில் பனசூரன் மாரடைப்பால் காலமானார்!

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மலையாள திரையுலக பாடலாசிரியர் அனில் பனசூரன் மாரடைப்பால் காலமானார்.

கேரளாவில் கவிஞராகவும் மற்றும் மலையாள திரையுலகில் பாடலாசிரியராகவும் இருந்து வந்தார். அனில் பனசூரன் (51).
சமீபத்தில் இவர் மயங்கி விழுந்துள்ளார். சுவாசக் கோளாறுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இந்நிலையில், தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 8.10 மணியளவில் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற நிலையிலேயே அதில் பலனின்றி அவர் காலமானார்.


தொடக்கத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த அவர், கடந்த 2007-ம் ஆண்டில் வெளிவந்த அரபிக்கத என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் பெற்றார். அவர் படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் புகழ்பெற்ற கவிஞர்களில் அவரும் ஒருவர். அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்