தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சிம்பு!

Untitled 1 59
Untitled 1 59

திரையரங்குகள் நூறுசதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசாங்கம் அனுமதி அளித்ததற்கு நடிகர் சிம்பு, தமிழக முதலமைச்சருக்கு நன்றி கூறியிருக்கின்றார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன.

சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு ஐம்பது சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது.

பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளதால், திரையரங்குகள் நூறு சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, நடிகர் சிம்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் ,திரையரங்குகள் நூறு சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில், எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் நூறுவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த, தமிழ் திரையுலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றி என்று பதிவு செய்து இருக்கிறார்.