ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய சூரி!

202101171837566298 Tamil News Tamil cinema Actor Soori pongal celebration in orphanage SECVPF
202101171837566298 Tamil News Tamil cinema Actor Soori pongal celebration in orphanage SECVPF

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் சூரி. இவர் தற்போது ஹீரோவாகவும் மாறி உள்ளார். வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடியுள்ளார். அப்போது அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்துள்ளார்.

மேலும் குழந்தைகளுக்கு தேவைப்படும் கொப்பி, பாடசாலை பை, உண்டியல் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார். பின்னர் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேர வேண்டும் என்று குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கியதோடு அவர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். சூரியின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.