ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

202103031539554501 1 avv5. L styvpf
202103031539554501 1 avv5. L styvpf

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் அருண் விஜய், விஜயகுமார், ஹரி, பிரியா பவானி சங்கர் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பை பழனி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் அருண் விஜய், விஜயகுமார், ஹரி, பிரியா பவானி சங்கர் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பை பழனி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.