தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து, ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் தான் நடிகர் தனுஷ்.
இவரின், அடுத்ததாக கர்ணன், ஜகமே தந்திரம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து, தற்போது தனுஷின் மனைவி, ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்பத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், தனுஷ் வைத்திருக்கும் புத்தகங்களில் எதை எடுத்து படிப்பது என தெரியவில்லை. என பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் தனுஷுக்கு அதிகமாக புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளது என்பதை அவர் தெரியப்படுத்தியுள்ளார்.