கிருபாகரன் மெரினா அவர்களுடைய அன்பின் ஒளிவெள்ளம் இசைத்தட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் 21.03.2021 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற இருக்கின்றது.
செயல்வீரன் அவர்களின் இசையில் உருவாக்கப்பட்ட அன்பின் ஒளிவெள்ளம் இசைத்தட்டு வெளியீட்டு விழாவானது கிருபாகரன் மெரினா அவர்களுடைய தயாரிப்பில் இடம்பெறவுள்ளது
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் வணக்கத்துக்குரிய ஜோசெப்தாஸ் ஜெயரட்ணம் ஆண்டகை அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன். செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளனர்