‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
தற்போது ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ், அடுத்ததாக ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார். ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். இதையடுத்து கே.ஜி.எப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்திலும் பிரபாஸ் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகின்றன.
இந்நிலையில், நடிகர் பிரபாஸ், ரூ. 6 கோடி மதிப்புள்ள லம்போர்கினி சொகுசு காரை வாங்கியிருக்கிறார். ஆரஞ்சு நிறத்தில் அவர் வாங்கியிருக்கும் அந்த காரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைலராகி வருகின்றன. அவர் சாலைகளில் அந்த காரில் செல்வது போன்ற வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இந்த ரக சொகுசு காரை வெகு சில திரைப்பிரபலங்கள் மட்டுமே வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.