கொரோனா வைரஸ் ஆனது அன்றாட மக்களை மட்டுமின்றி, அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் என அனைவருக்கும் கொரோனா பரவி வருகிறது.
அந்த வகையில், பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான சுந்தர்.சி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த மனைவி குஷ்பு, எனது கணவர் சுந்தர்.சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் நன்றாக இருக்கிறார். ஆனாலும் முன்னெச்செரிக்கையான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உடனடியாக பரிசோதனை செய்து பார்க்கவும். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.