நடிகர் பிரஷாந்தின் புதிய படத்தில் நடிகர் கார்த்திக் இணைந்துள்ளது கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.
இப்படத்தில் ஏற்கனவே நடிகை சிம்ரன் இணைந்துள்ளார். பிரஷாந்தும், சிம்ரனும் சுமார் 20 வருடங்கள் கழித்து இணைந்து இப்படத்தில் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவர்களுடன் நடிகை பிரியா ஆனந்த் இணைந்துள்ள நிலையில் இன்று இப்படத்தில் நடிகர் கார்த்திக் இணைந்துள்ளார்.இப்படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.