கிரிஷ் உருவாக்கிய தடுப்பூசி விழிப்புணர்வு பாடல்

202106022000258126 Tamil News Tamil cinema krish awareness song SECVPF
202106022000258126 Tamil News Tamil cinema krish awareness song SECVPF

தடுப்பூசியால் மட்டுமே நாம் இந்த கொடிய காலத்தை கடந்து செல்ல முடியும் என்று பின்னணி பாடகர், நடிகர், இசையமைப்பாளர் கிரிஷ் கூறி இருக்கிறார்.

நடிகர், இசையமைப்பாளர் கிரிஷ், தன் பன்முக திறமையினால், தமிழ் சினிமாவில், புகழ் மிக்க படைப்பாளியாக, கவனம் குவித்து வருகிறார். சமீபத்தில் முருக கடவுள் குறித்து, ஆன்மிக பாடல் ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருந்தார். மிகப்பெரும் வெற்றியை குவித்த, அந்த ஆல்பம் பல முனைகளில் இருந்தும் பாராட்டுக்களையும் குவித்தது. இந்த நிலையில் தற்போது நம் சமூகத்திற்கு அவசியமான, கொவிட் தடுப்பூசி குறித்த, விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், ஒரு அற்புதமான பாடலை உருவாக்கியுள்ளார். எஸ் பி(SP Dr). சிவக்குமார் ஐ பி எஸ் (IPS,) இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

பாடல் குறித்து இசையமைப்பாளர் கிரிஷ் கூறியதாவது,

மதிப்புமிக்க, அற்புதமான இந்த விழிப்புணர்வு பாடலில், பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதும், மாஸ்க் அணிவதும், இந்தப்போரில் நமது தலையாய கடமையாகும். ஆனால் இந்தப்போரில் வெல்ல, இவையனைத்தையும் விட முக்கியமானது, ஒவ்வொருவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்வதே ஆகும். தடுப்பூசியால் மட்டுமே நாம் இந்த கொடிய காலத்தை கடந்து செல்ல முடியும். இப்பாடல் இந்த சமூக கருத்தை வலியுறுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை எழுதியஎஸ் பி (SP Dr.) சிவக்குமார் ஐ பி எஸ்(IPS) அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

202106022000258126 1 Krish. L styvpf
202106022000258126 1 Krish. L styvpf

இந்த தடுப்பூசி விழிப்புணர்வு பாடலை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், மாஸ்க் மற்றும் சானிடைஸர் ஆகியவற்றை 800க்கும் மேற்பட்ட முன்கள காவல்துறை பணியாளர்களுக்கு கிரிஷ் வழங்கியுள்ளார்.